"7 பேர் விடுதலை விவகாரத்தில் திமுக அரசியல் நாடகம்"

7 பேர் விடுதலை விவகாரத்தில், திமுக உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பி, அரசியல் நாடகமாடுவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

7 பேர் விடுதலை தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விளக்கம் அளித்தார். அப்போது, 7 பேர் விடுதலை தொடர்பாக அதிமுக அரசு எடுத்த முயற்சிகளையும், திமுக செய்ய தவறிய நடவடிக்கைகள் குறித்து பட்டியலிட்டார். மத்தியில் அங்கம் வகித்த திமுக, 7 பேர் விடுதலை தொடர்பான தீர்மானம் குறித்து வாய் திறக்கவில்லை என்றும், 7 பேர் விடுதலை விவகாரத்தில், திமுக அரசியல் நாடகம் நடத்துவதாகவும் முதலமைச்சர் சாடினார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், 7 பேர் விடுதலையில் அதிமுக அரசை முழு மூச்சுடன் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். திமுக உண்மைக்கு மாறான தகவல்களை திமுக பரப்பி வருவதாக முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.

7 பேர் விடுதலைக்காக போராடுவது போன்ற தோற்றத்தை திமுக ஏற்படுத்தி வருவதாகவும், இவை அனைத்தும் வருகிற தேர்தலில் அனுதாபத்தை பெறவே இந்த நாடகத்தை நடத்துவதாகவும் முதலமைச்சர் சாட்டினார்.

 

Exit mobile version