ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மதுபான கூடமாக மாற்றிய திமுக பிரமுகர்

சத்தியமங்கலம் அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தை மதுபான கூடமாக மாற்றிய திமுக ஊராட்சி செயலாளரை கண்டித்து பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகபுதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிலர் மது அருந்துவதாக பொது மக்களுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற பொதுமக்கள், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்த செண்பகபுதூர் திமுக ஊராட்சி செயலாளர் சதாசிவம் மற்றும் ஊராட்சி செயலாளர் ராஜேஷ் கண்ணா ஆகியோரிடம் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, திமுக பிரமுகர் சதாசிவம் பொதுமக்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலரிடம், மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Exit mobile version