சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யும் திமுக பிரமுகர்கள்

சேலம் மாவட்டம், சூரமங்கலம் அருகே திமுக பிரமுகர்களின் வீடுகளில் நடத்திய சோதனையில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சூரமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குரங்கு சாவடி பகுதியில் திமுக பிரமுகர்கள் சிலர் சந்து கடைகள் அமைத்து மதுவிற்பனை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, திமுக பிரமுகருக்கு சொந்தமான 5 வீடுகளின் பூட்டை உடைத்து சோதனை மேற்கொண்டதில், பெட்டி, பெட்டியாக மதுபாட்டல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவாக உள்ள திமுக பிரமுகர்களான மெய்யனூர் பகுதி திமுக பிரதிநிதி மணி, மற்றும் திமுக பிரமுகர்கள் பரிமளா மற்றும் மருதாயி ஆகியோரை தேடி வருகின்றனர்.

Exit mobile version