தேர்தல் விதி முறைகளை மீறி விடியா திமுக கட்சியினர் அராஜகம் !

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில், விடியா திமுக கட்சியினர், தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அசோகபுரம் 17 வார்டுக்கு உட்பட்ட நேரு வீதியில், கை சின்னம், உதய சூரியன் சின்னங்களை கோலம் வடிவில், தேர்தல் விதி முறைகளை மீறி போட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த, முன்னாள் அமைச்சரும், தேர்தல் பொறுப்பாளருமான கே.சி.கருப்பணன் தலைமையிலான அதிமுகவினர், இதுகுறித்து திமுகவினரிடம் தட்டிக் கேட்டுள்ளனர். முதலில் மழுப்பலான பதில் தெரிவித்த திமுகவினர், பின்னர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version