திமுக ஊராட்சி சபை கூட்டம்: திமுகவுக்கு ஆதரவாக பேசும் பெண்களுக்கு முக்கியத்துவம்?

திமுக ஊராட்சி சபைக் கூட்டத்தில், பிரச்சனைகளைப் பற்றி பேச ஒரு சிலருக்கே வாய்ப்பளிக்கப்பட்டதால், பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சோளிங்கரில் நடந்துள்ளது.

வேலூர் மாவட்டம், சோளிங்கர் அடுத்த கரடி குப்பம் பகுதியில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள், வாகனங்களில் வரவழைக்கப்பட்டனர். யார் யார் என்னென்ன கேள்விகளைக் கேட்க வேண்டும் என்பது குறித்து அவர்களில் சிலருக்கு மட்டும் வாய்ப்பளிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த சிலர், அனைவரையும் அழைத்து விட்டு, சிலருக்கு மட்டும் பேச வாய்ப்பளிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார். இதற்காகத்தான் எங்களை அழைத்தீர்களா என்றும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.

Exit mobile version