குத்தகை நிலத்தை திருப்பி கேட்டு விவசாயியை தாக்கிய திமுக பிரமுகர்

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே, குத்தகைக்கு எடுத்த நிலத்தை திரும்ப தர வலியுறுத்தி, விவசாயி ஒருவரை திமுக பிரமுகர் தாக்கியுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உமரி காடு கிராமத்தை சேர்ந்த பிரபாகர் என்ற விவசாயி, அதே பகுதியை சேர்ந்த திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளர் SRS உமரி சங்கரின் மனைவியிடம், 32 செண்ட் நிலத்தை குத்தகைக்கு எடுத்ததாக கூறப்படுகிறது. நிலத்தை பெற்ற ஆதாரமாக ஐந்தரை சவரன் நகையை விவசாயி பிரபாகர் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த19-ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடன் சென்ற SRS உமரி சங்கர், பிரகாரிடம் நிலத்தை திருப்பி தரும்படி கூறியுள்ளார். அப்போது, நிலத்திற்காக வழங்கிய ஐந்தரை சவரன் நகையை திருப்பி தரும்படி கேட்ட பிரபாகரையும், அவரது மனைவியையும், சங்கரின் ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனிடையே, பிரபாகர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

Exit mobile version