திமுக எம்.பி. கனிமொழி பங்கேற்ற விழாவில் அராஜகத்தில் ஈடுபட்ட தொண்டர்கள்

விருதுநகரில் திமுக எம்.பி. கனிமொழி வருகையையொட்டி, அந்த கட்சியினர் மதுபோதையில் அராஜகத்தில் ஈடுபட்டது பொதுமக்களை முகம் சுழிக்க வைத்தது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் புதிய நூலகக் கட்டடத்தை திறந்து வைக்க கனிமொழி மாலை 4 மணிக்கு வரவுள்ளதாகக் கூறி திமுக சுவரொட்டிகளை ஒட்டினர். ஆனால், மாலை 5.30 மணி வரை தொண்டர்கள் கூட விழாவிற்கு வராததால், இருக்கைகள் அனைத்தும் காலியாக கிடந்தன. இதையடுத்து, கூட்டம் சேர்ப்பதற்காக திமுகவினர் வெளியூர்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்தனர். அவர்கள் வந்த வாகனங்கள் அனைத்தும் சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மாலை 6 மணிக்கு மேல் விழாவிற்கு வந்த கனிமொழியுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள, திமுகவினர் முண்டியடித்ததால் சிறிது நேரம் அங்கு பரப்பரப்பான சூழல் நிலவியது. கனிமொழி நூலக கட்டடத்தை திறந்து வைத்த நேரத்தில் திமுகவினர் டாஸ்மாக் கடையில் குவிந்ததுடன், மதுபோதையில் அராஜகத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினர்.

Exit mobile version