திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி பிப்.14 மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன் ஆஜராக உத்தரவு

போக்குவரத்து துறையில் வேலை பெற்று தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், வரும் 14 ம் தேதி  மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன் நேரில் ஆஜராக  திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை பெற்று தருவதாக கூறி 2  கோடியே 80 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், நிபந்தனைகளுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவில் விளக்கம் கோரி மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் நீதிபதியிடம் முறையிட்டார். இதையடுத்து, ஏற்கனவே மத்திய குற்றப்பிரிவு போலீசார் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள நோட்டீஸ் அடிப்படையில் வரும் 14ம் தேதி செந்தில் பாலாஜி நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என ஆணையிட்ட நீதிபதி, காவல்துறை சார்பில் முன்ஜாமீன் உத்தரவில் திருத்த மனு தாக்கல் செய்ய அனுமதியளித்து உத்தரவிட்டார்.

Exit mobile version