திமுக எம்.எல்.ஏ. இதயவர்மன் கள்ளத்துப்பாக்கி வாங்கியது அம்பலம்!!

துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட திருப்போரூர் திமுக எம்.எல்.ஏ. இதயவர்மன், துப்பாக்கிச்சுடும் பயிற்சிக்காக கள்ளத்துப்பாக்கி வாங்கியது விசாரணையில் அம்பலமானது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே, ரியல் எஸ்டேட் அதிபர் குமாருடன் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் திமுக எம்எல்ஏ இதயவர்மன் கைது செய்யப்பட்டார். சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில் துப்பாக்கிச்சுடும் பயிற்சிக்கு கள்ளத்துப்பாக்கி வாங்கியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதயவர்மன் வீட்டில் கைபற்றப்பட்ட 3 துப்பாக்கிகளில் ஒன்று உரிமம் காலாவதியானது எனவும், மீதமுள்ள 2 துப்பாக்கிகளும் கள்ளத்தனமாக வாங்கியதாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version