திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் வீட்டில் துப்பாக்கி, மற்றும் ஈய குண்டுகள் பறிமுதல்!

திருப்போரூர் திமுக எம்.எல்.ஏ. இதயவர்மன் வீட்டில், காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் துப்பாக்கிகள் மற்றும் 3 கிலோ ஈய குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே அண்மையில் ஏற்பட்ட நிலத்தகராறில், ரியல் எஸ்டேட் அதிபர் குமார் என்பவர் மீது திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவான எம்.எல்.ஏ. இதயவர்மனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், அவரது வீட்டில், காவல்துறையினர் மீண்டும் சோதனை நடத்தினர். அப்போது, துப்பாக்கிகள், 3 கிலோ ஈய குண்டுகள், துப்பாக்கி குண்டுகள் தயாரிக்கும் இயந்திரம் ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றினர். மக்கள் நலப்பணியாற்றும் எம்.எல்.ஏ.வின் வீட்டில் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Exit mobile version