திமுக எம்எல்ஏ குணமடைய இறைவனை வேண்டி கொள்கிறேன் : முதலமைச்சர்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், கடந்த 2 ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவமனை தலைமை மருத்துவர் முகமது ரீலாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஜெ.அன்பழகனின் உடல் நலம் குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அன்பழகனுக்கு, அரசு சார்பில், அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அப்போது தெரிவித்தார். மேலும், திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் விரைவில் குணமடைய வேண்டி கொள்வதாக தனது டுவிட்டர் பக்கத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version