சுயேட்சை வேட்பாளர்களை கடத்தி சென்று திமுகவினர் அராஜகம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் புதிதாக பதவியேற்ற சுயேட்சை வேட்பாளர்களை திமுகவினர் கடத்தி சென்றுள்ளதால் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு யூனியன் அலுலவகத்தில், பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் சுயேட்சையாக வெற்றிபெற்ற வேட்பாளர்களை திமுகவினர் டெம்போவில் ஏற்றி சென்றதுடன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.

Exit mobile version