நாமக்கலில் திமுக பிரமுகர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

நாமக்கலில் திமுக பிரமுகரும் ப.சிதம்பரத்தின் உறவினருமான டாக்டர் ஆனந்த் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க மருத்துவரணி அமைப்பாளராக இருந்தவர் டாக்டர் ஆனந்த். இவர் ப.சிதம்பரத்தின் மனைவியான நளினி சிதம்பரத்தின் உறவினர் ஆவார். இன்று மாலை ஆனந்த் பள்ளிப்பாளையத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். தனது கிளினிக்கில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு 1ஆம் தேதி வழங்க வேண்டிய சம்பளத்தை முன்கூட்டியே அவர் வழங்கியுள்ளார். இந்நிலையில் அவரது மரணம் பலவித சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version