போக்குவரத்து விதியை மீறி காவல்துறையினரை மிரட்டிய திமுக பிரமுகர்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற திமுகவை சேர்ந்த நபரை, காவல்துறையினர் பிடித்த போது, அவர் காவல்துறையினரை மிரட்டும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

ஓமலூர் அருகேயுள்ள தொளசம்பட்டி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர், அமரகுந்தி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்ற திமுக பிரமுகர் கோவிந்தராஜை தடுத்து நிறுத்தி அபராதம் செலுத்துமாறு கூறியுள்ளார்.
அப்போது திமுக பிரமுகர் கோவிந்தராஜ், அபராதம் செலுத்த மறுத்து காவல்துறையினரை மிரட்டினார். இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் செல்வேன் என்றும், முடிந்தால் வழக்குப்பதிவு செய்து முடிந்ததை பார்த்து கொள்ளுங்கள் என காவல்துறையினரை மிரட்டும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Exit mobile version