நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் திமுக பிரமுகர் சீனியம்மாள் அவரது கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை 23 ஆம் தேதி நெல்லை ரெட்டியார்பட்டியில் திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர், பணிப்பெண் ஆகிய 3 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், திமுக பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புள்ளதாக, கார்த்திகேயனின் தாயாரும் திமுக பிரமுகருமான சீனியம்மாளையும் அவரது கணவர் சன்னாசியையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Discussion about this post