பொய்யான வாக்குறுதியளிக்கும் திமுக, தொடர்ந்து ஏமாறும் பொதுமக்கள்

மதுரை வடக்கு தொகுதியில் பட்டா வழங்கப்படும் என்ற பொய்யான வாக்குறுதியை அள்ளி தெளித்த திமுகவினர், தற்போது பட்டா வழங்க மறுப்பதை கண்டித்து 500க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பீபிகுளம் , முல்லைநகர் , மீனாட்சிபுரம், நேதாஜி மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளை, ஆக்கிரமிப்புகள் என கூறி அதனை அகற்றுவதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், தேர்தலின் போது திமுகவினர் தங்களுக்கு பட்டா வழங்குவதாக கூறிவிட்டு, தற்போது வழங்காமல் வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டினர்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் பல தலைமுறைகளாக அங்கு வசித்து வரும் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியல் காரணமாக அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Exit mobile version