கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருந்த திமுக பிரமுகரின் மகன் கைது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருந்த திமுக பிரமுகரின் மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

களத்துமேட்டுத் தெருவைச் சேர்ந்த முன்னாள் திமுக நகராட்சி கவுன்சிலர் வசந்தா என்பவரின் மகன் ராமு, ஏரிக்கரை பகுதியில் கள்ளச்சாராயம் பதுக்கி விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், 20 லிட்டர் கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 110 லிட்டர் கள்ளச்சாராயத்தை கைப்பற்றி அழித்தனர்.

பின்னர் கள்ளச்சாராயத்தை பதுக்கி வைத்திருந்தாக திமுக பிரமுகரின் மகன் ராமுவை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version