திமுக தலைவர் ஸ்டாலின் பொய்யை மட்டுமே பேசி வருகிறார்- துணை முதலமைச்சர்

திமுக தலைவர் ஸ்டாலின் பொய்யை மட்டுமே பேசுவதாகவும் மக்களவைத் தேர்தலிலும் அவ்வாறெ பிரசாரம் செய்ததாகவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

வேலூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகத்தை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்மை பயக்கக் கூடியதாக அதிமுக அரசு விளங்குவதாக தெரிவித்தார். திமுக தலைவர் ஸ்டாலின் எப்பொழுதும் பொய்யான தகவல்களைப் பேசி வருவதாக தெரிவித்த அவர், திமுகவை மக்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள் எனத் தெரிவித்தார்.

Exit mobile version