அனுமதியின்றி வெடிப் பொருட்கள் வைத்திருந்த திமுக பிரமுகருக்கு 3 ஆண்டு சிறைதண்டனை

உரிய அனுமதியின்றி வெடிபொருட்கள் வைத்திருந்த வழக்கில் கடையநல்லூர் ஒன்றிய திமுக செயலாளருக்குத் தென்காசி நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கரடிக்குளத்தைச் சேர்ந்த திமுக கடையநல்லூர் ஒன்றியச் செயலாளர் செல்லத்துரை, ராசு, அருணாசலம் ஆகியோர் உரிய அனுமதி இல்லாமல் வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பாறைகளை உடைத்துக் கொண்டிருந்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் மூவரையும் கைது செய்து வெடிபொருட்களையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தென்காசி கூடுதல் உதவி அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான அருணாசலம் இறந்துவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் திமுக ஒன்றியச் செயலாளர் செல்லத்துரை, ராசு ஆகிய இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

Exit mobile version