மக்கள் உரிமைக்காக பாடுபடாத கூட்டணி திமுக- ஜெயவர்தன்

அதிமுக தலைமையிலான கூட்டணி மக்களுக்கு நலன் பயக்கக் கூடிய கூட்டணி என்றும், திமுக – காங்கிரஸ் கூட்டணி மக்கள் உரிமைகளுக்காக பாடுபடாத கூட்டணி என்று அதிமுக நாடாளுமன்ற தென்சென்னை தொகுதி வேட்பாளர் ஜெயவர்தன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமாரின் மகனும் நாடாளுமன்ற தென்சென்னை தொகுதி வேட்பாளருமான ஜெயவர்தன், சென்னை மைலாப்பூரில் தனது பிரசாரத்தை இன்று துவக்கினார். முன்னதாக அதிமுக தேர்தல் பணிமனையை அவர் துவக்கி வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றிபெறும் என்று தெரிவித்தார்.

Exit mobile version