வேலூர் நாடாளுமன்ற தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு திமுகவே காரணம்

வேலூர் நாடாளுமன்ற தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு முழு முதற் காரணம் திமுக தான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மேடையில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதிமுக கூட்டணி நாடாளுமன்ற வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து பேசிய முதலமைச்சர், ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி, திமுக ஆட்சி என குற்றம்சாட்டினார்.

Exit mobile version