ஆட்சியைக் கலைப்பதற்காக திமுக நாடகமாடி வருகிறது : அமைச்சர் எஸ்.பி வேலுமணி

அதிமுகவின் ஆட்சியைக் கலைப்பதற்காக திமுக நாடகமாடிக் கொண்டிருப்பதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்டம் திவான்சாபுதூரில், அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் உள்ளாட்சித் துறை அமைச்சார் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகளையும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களையும் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து விழா மேடையில் பேசிய அமைச்சர் வேலுமணி, அதிமுக அரசால் வழங்கப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார். மேலும், திமுகவையும், ஸ்டாலினையும் கடுமையாக சாடினார். நிகழ்ச்சியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு உட்பட கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Exit mobile version