நாடாளுமன்ற தேர்தலுக்கு திமுக தயாரானதாக தெரியவில்லை : தம்பிதுரை

நாடாளுமன்ற தேர்தலுக்கு திமுக தயாரானதாக தெரியவில்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட புத்தாநத்தம் ஊராட்சி, பண்ணப்பட்டி ஊராட்சி, கருப்புசார் ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நீட் உள்ளிட்ட திட்டங்களை, தற்போது தாங்கள் ஆதரிப்பது போன்ற திமுக கூறுவதாக குற்றம்சாட்டினார்.

மத்திய, மாநில அரசுகளுக்கிடையே சுமூகமாக உறவு இருப்பதாகவும், உரிமைகளை கேட்பதில் மட்டுமே முரண்பாடு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version