உள்ளாட்சி தேர்தல் தோல்வியால் திமுகவினர் அராஜகம்

சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் தோல்வி காரணமாக அழைப்பிதழ் விற்பனை கடையில் திமுகவினர் தாக்குதல் நடத்தியது குறித்த சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

சிவகங்கையில், மகேந்திரன் என்பவர் அழைப்பிதழ் கடை நடத்தி வருகிறார். இவர் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில், இவரது கடைக்குள் நுழைந்த இருவர், மகேந்திரனின் உறவினர் ஜெயராமன் என்பவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், கடையில் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், கடையின் முன்பக்கம் சேதமடைந்தது. இதுகுறித்து மகேந்திரன் சார்பில், காவல்  நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த தாக்குதல் தொடர்பான சிசிடிவி பதிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அதன் படி, உள்ளாட்சி தேர்தலில் மகேந்திரனை எதிர்த்து போட்டியிட்ட திமுக ஒன்றிய செயலாளர் ஜெயராமன் தோல்வியடைந்ததன் காரணமாக, அவரது ஓட்டுநர் விமல் மற்றும் கூட்டாளிகள் கடையில் புகுந்து தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version