அரசியல் ஆதாயத்திற்காக சிறுபான்மை மக்களை திமுக தூண்டிவிடுகிறது: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அரசியல் ஆதாயத்திற்காக குடியுரிமை சட்டம் தொடர்பாக தவறான தகவல்களை அளித்து, சிறுபான்மை மக்களை திமுக தூண்டிவிடுவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரூரில் வடக்கு நகர அதிமுக சார்பில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக கூறினார்.

கருணாநிதி மறைவின் போது தமிழகத்தில் 88 அரசு பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும், ஜெயலலிதா மறைவின் போது ஒரு பேருந்தும் சேதப்படுத்தப்படவில்லையெனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். மேலும், அரசியல் ஆதாயத்திற்காக குடியுரிமை சட்டம் தொடர்பாக தவறான தகவல்களை அளித்து, சிறுபான்மை மக்களை திமுக தூண்டிவிடுவதாக அமைச்சர் குற்றம்சாட்டினார்.

Exit mobile version