ஆட்சியை கலைக்க முடியாத விரக்தியில் தி.மு.க. சதிச்செயல்

கொடநாடு விவகாரத்தில், முதலமைச்சர் மீது பழி சுமத்த திமுக சதி செய்வது அம்பலமாகி இருப்பதாக மின்துறை அமைச்சர் தங்கமணி குற்றம் சாட்டியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் 102வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அதில், பங்கேற்று பேசிய அமைச்சர் தங்கமணி, ஆட்சியில் இல்லாதே போதே, பிரியாணிக் கடை, அழகு நிலையத்தில் புகுந்து மக்கள் மீது தாக்குதல் நடத்தும் திமுக, ஆட்சிக்கு வந்தால் யாரும் நடமாடக்கூட முடியாது என்றார். அதிமுக ஆட்சியை கலைக்க முடியாததால், முதலமைச்சர் மீது கொலைப்பழியை சுமத்த திமுக முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

Exit mobile version