உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள திமுக தயங்குகிறது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

உச்ச நீதிமன்றத்தை நாடுவதன் மூலம், உள்ளாட்சித் தேர்தல் யாரால் தள்ளிப்போகிறது என்பதை ஸ்டாலின் தெளிவுபடுத்தி விட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எப்படியாவது தேர்தலை தள்ளிப்போட வேண்டும் என்பது ஸ்டாலினின் குறிக்கோள் என்றும், தேர்தலை கண்டு திமுக அச்சப்படுவதாகவும் விமர்சித்தார். மேலும் வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வரும் வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாகவும், தமிழகத்தில் 20 நாளில் வெங்காயத்தின் விலை குறையும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Exit mobile version