தி.மு.க அனைத்து கட்சி கூட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை -கமல்ஹாசன்

கஜா புயல் பாதிப்பை, தேசிய பேரிடர் இல்லை என்று மத்திய அரசு கூறுவது வருத்தமாக உள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டு வருவதற்கு அனைவரும் உதவ வேண்டும் என்று கூறினார். மத்திய குழுவின் கருத்துக்கள், மத்திய அரசின் மனதை மாற்றும் என நம்புவோம் என்றும் அவர் கூறினார்.

திமுக சார்பில் நடைபெற்ற தோழமை கட்சி கூட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பு விடுவிக்கவில்லை என்றும், அனைத்து கட்சி போராட்டத்துக்கும் அழைப்பு வரவில்லை என்றும் கூறினார்.

புயல் பாதித்த பகுதிகளை மீண்டும் பார்க்க தான் செல்வதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் தேவையை அறிந்து கொள்ள ஆய்வு பயணமாக இருக்கும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

 

Exit mobile version