நாமக்கல் அதிமுக வேட்பாளர் மீது பொய் புகார் அளித்த திமுக

திமுகவினரின் அளித்த பொய் புகாருக்கு அதிமுக வழக்கறிஞர் ஆதாரத்துடன் பதில் அளித்ததால் தேர்தல் அலுவலர் அதிமுக வேட்பாளரின் மனுவை ஏற்றார். நாமக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அனைத்து கட்சியினர் மற்றும் சுயேட்சைகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த வேட்புமனுக்கள் மீதான மறு பரிசீலனை மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக வேட்பாளர் காளியப்பன் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட போது, திமுகவினர் அவரின் மனுவை தள்ளுபடி செய்ய கேட்டுகொண்டனர்.

இதற்கு பதிலளிக்க தேர்தல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பினார். இதனை தொடர்ந்து அதிமுக வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்த நிலையில் 3 மணி நேர ஆய்வுக்கு பின், அதிமுக வேட்பாளர் காளியப்பன் மனு ஏற்கப்பட்டது.

Exit mobile version