பொதுமக்களை முகம் சுளிக்க வைத்த திமுக கிராம சபை கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், முன்னாள் ஊராட்சி தலைவரை திமுக எம்.எல்.ஏ தரக்குறைவாக பேசி சண்டையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாம்பரத்தை அடுத்த திருவஞ்சேரி ஊராட்சி அலுவலக வளாகத்தில்
நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் அதிகாரிகள் முன்னிலையில் பொதுமக்கள் தங்களது கிராம வளர்ச்சி கோரிக்கைகளை தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

இதில் கலந்து கொண்ட தாம்பரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, முன்னாள் திருவஞ்சேரி ஊராட்சி தலைவரை அங்கிருந்து செல்லுமாறு மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. உனக்கு என்ன இங்கு வேலை, இங்கிருந்து செல் என்று ஒருமையில் மிரட்டி அவர் பேசியது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.

Exit mobile version