தங்கள் கட்சி எம்எல்ஏ-வுக்கு கூட கொரோனாவை கட்டுப்படுத்தாத திமுக அரசு

சட்டப்பேரவை நாளை கூடவுள்ள நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தங்கள் கட்சி எம்எல்ஏவை கொரோனாவில் இருந்து பாதுகாக்க முடியாத திமுக அரசு தமிழக மக்களை எப்படி காப்பாற்ற போகிறது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர், நாளை தொடங்குகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறுகிறது.

ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் உரை நிகழ்த்தவுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில், பெரம்பலூர் திமுக எம்எல்ஏ பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர், கூட்டணி கட்சி உறுப்பினரையே கொரோனாவில் இருந்து பாதுகாக்க முடியாத திமுக அரசு, தமிழக மக்களை எப்படி தொற்றில் இருந்து பாதுகாக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

Exit mobile version