திமுக பொருளாளர் பதவியில் இருந்து விலகிய துரைமுருகன்

தி.மு.க.வில் காலியாக உள்ள பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்காக, பொருளாளர் பதவியில் இருந்து துரைமுருகன் விலகியுள்ளார்.

தி.மு.க.வில் பொதுச் செயலாளராக இருந்த பேராசிரியர் அன்பழகன் அண்மையில் காலமானார். இதையடுத்து, தி.மு.க.வில் காலியாகவுள்ள பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியிடுகிறார். இதற்காக தற்போது வகித்து வரும் பொருளாளர் பதவியை துரைமுருகன் ராஜினாமா செய்துள்ளார். வரும் 29ம் தேதி தி.மு.க. தலைமை அலுவலகத்தில், அந்த கட்சிக்கான பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

Exit mobile version