ராணிப்பேட்டையில் தி.மு.க நிர்வாகிகள் மோதல்

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை திமுகவில் உள்கட்சி பூசலால் நிர்வாகிகள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில், திமுகவினர் கலந்து கொண்ட கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு முன்னதாக வேலூர் மாவட்ட செயலாளரும், ராணிப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான காந்தி மற்றும் ராணிப்பேட்டை நகர செயலாளர் பிஞ்சி பிரகாஷூக்கு இடையே கடுமையான தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ராணிப்பேட்டை திமுகவில் உள்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டியதாக பேசப்படுகிறது. இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து முறையிட உள்ளதாக ராணிப்பேட்டை நகர செயலாளர் பிஞ்சி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Exit mobile version