வங்கி கடன் வாங்கி தருவதாகக் கூறி ஏமாற்றிய திமுக நிர்வாகி

பொள்ளாச்சியில் சிறு தொழில் தொடங்க வங்கிக் கடன் வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்த திமுக நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்து, காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகரை சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் ஞானவேல், சிறு தொழில் தொடங்க வங்கி கடன் வாங்கி தருவதாக கூறி விளம்பரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்து ராமலிங்கம் என்பவர் திமுக நிர்வாகி ஞானவேலை அணுகியுள்ளார். அப்போது, முன்பணமாக 50 ஆயிரம் ரூபாயை பிரமுகர் ஞானவேல் பெற்றுள்ளார். ராமலிங்கம் பணம் கொடுத்து 3 மாதங்கள் ஆகியும் கடன் பெற்று தராமல் ஞானவேல் ஏமாற்றியுள்ளார். இதனை தொடர்ந்து, பணத்தை திருப்பி கேட்ட தன்னை, திமுக பிரமுகர் ஞானவேல் தாக்கியதாக பாதிக்கப்பட்ட ராமலிங்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து தலைமறைவாக உள்ள திமுக நிர்வாகி ஞானவேல் உள்ளிட்ட 6 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Exit mobile version