இல்லாத ஒன்றை இருப்பதாக கூறி மக்களை திமுக திசை திருப்புகிறது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

இல்லாத ஒன்றை இருப்பதாக கூறி சிறுபான்மையின மக்களை திமுக திசை திருப்புவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டி உள்ளார்.

சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான விவாதத்தில் பேசிய அமைச்சர், அதிமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றார். சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாவலனாக அதிமுக அரசு இருப்பதாக அப்போது அமைச்சர் கூறினார். குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என எதிர்க்கட்சிகளை பார்த்து கேள்வி எழுப்பிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மத்திய உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்று தராதது ஏன் என திமுகவுக்கு கேள்வி எழுப்பினார். பிரிவினை ஏற்படுத்தி நாட்டை சீரழிக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்வதாகவும் அமைச்சர் சாடினார்.

Exit mobile version