"பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லக் கூட திமுகவினர் வரவில்லை"

கொரோனா காலத்தில் மக்கள் தவித்த போது, திமுகவினர் ஆறுதல் சொல்லக்கூட வரவில்லை என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது, நாடாளுமன்ற தேர்தலில் பொய் வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்ற திமுகவினர், தொகுதி பக்கமே வரவில்லை என்று சாடினார். திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, முதலமைச்சரின் தாயாரை தரக்குறைவாக பேசி பிரசாரம் செய்வதாக தெரிவித்த அமைச்சர், எப்போதும் மக்களுக்காக உழைக்கும் அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Exit mobile version