போலி மது விற்பனை செய்த திமுக பிரமுகர் கைது

கொடைக்கானலில் போலி மதுபானம் விற்பனை செய்த தி.மு.க பிரமுகர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் மதுவிலக்கு பிரிவினர்
சோதனையில் ஈடுபட்டனர். வில்பட்டி பகுதியில் போலி மதுபாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் பழனி மதுவிலக்கு பிரிவினர் அங்கு சோதனையில் ஈடுபட்டனர். இச்சோதனையில் இருசக்கர வாகனத்தில் வைத்து போலி மது விற்பனை செய்த அப்பகுதியைச் சேர்ந்த தி.மு.க வார்டு செயலாளர் தண்டபாணி என்பவரை போலிசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 200க்கும் மேற்பட்ட போலி மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

 

 

Exit mobile version