கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக தங்கையை கொன்ற திமுக கவுன்சிலர்!!!

மதுரை மாவட்டத்தில், கள்ளக்காதல் ஜோடி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, திமுக கவுன்சிலர் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே, கடந்த 17ம் தேதி திருவாதவூர் பெரிய கண்மாய் மடை பகுதியில் ஆண் மற்றும் பெண்ணின் சடலம் கிடந்தது. இதுதொடர்பாக, மேலூர் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் ஆயம்மாள் என்பதும், விமல் என்பவரின் மனைவியும் என்பதும் தெரியவந்தது. மேலும், அப்பெண்ணின் அண்ணன் தமிழ்மாறன் மற்றும் கணவன் விமல் ஆகியோர் சேர்ந்து, இருவரையும் கொலைச் செய்ததும் கண்டறியப்பட்டது. இதனையடுத்து தமிழ்மாறன், விமல் உட்பட 4 பேரை கைது செய்த தனிப்படை காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஆயம்மாள், அன்புநாதன் என்பவருடன் தவறான உறவில் ஈடுபட்டதால், அவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது வெட்டிக் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டனர். கைது செய்யப்பட்ட தமிழ்மாறன் 10வது வார்டு திமுக கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version