கனிமொழிக்கு ஆரத்தி எடுத்தால் ரூ.2000

தூத்துக்குடியில், கனிமொழிக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு திமுக மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் 2 ஆயிரம் ரூபாய் வழங்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைவரான ஸ்டாலின், பல்வேறு இடங்களில் கிராம சபை கூட்டத்தை நடத்தி வருகிறார். அந்த கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சியும் வெளியானதால் கடும் விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில், தூத்துக்குடி சென்ற திமுக எம்.பி.கனிமொழிக்கு பெண்கள் சிலர் ஆரத்தி எடுத்தனர். அப்போது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு திமுக மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழியின் அருகே நின்றபடி, ஆரத்தி எடுத்தால் 2 ஆயிரம் ரூபாய் என்பது போல், கையில் இருந்த பணத்தை வரிசையாக வந்த பெண்களுக்கு வழங்கினார். இந்தச் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version