திமுக – காங்கிரஸ் இடையேயான கூட்டணி, குடும்ப ஆட்சிக்கான கூட்டணி – தமிழிசை

மக்களோடு மக்கள் இணைந்தால் மக்களாட்சி, குடும்பத்தோடு குடும்பம் இணைந்தால் குடும்ப ஆட்சி என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து  திமுக பொருளாளர் துரைமுருகன், கோபாலபுரத்து குடும்பமும் நேரு குடும்பமும் மீண்டும் இணைந்தது என்று  கருத்து தெரிவித்திருந்தார்.

துரைமுருகனின் இந்த கருத்து குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மக்களோடு மக்கள் இணைந்தால் மக்களாட்சி, குடும்பத்தோடு குடும்பம் இணைந்தால் குடும்ப ஆட்சி. மக்கள் புரிந்து கொள்வார்கள் நீங்கள் நடத்தியது குடும்ப ஆட்சி என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version