காங்.-திமுக கூட்டணி தமிழகத்திற்கு எந்த நன்மையும் செய்யவில்லை: ரவீந்திரநாத் குமார்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் லோகிராஜன் ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

பிரசாரத்தின் போது பேசிய ரவீந்திரநாத் குமார் காங்கிரசும் – திமுகவும் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளன என்றும், ஆட்சியில் இருந்த போது தமிழகத்திற்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டார். மதுரை -போடி ரயில் சேவையை நிறுத்தியது காங்கிரஸ் கட்சி தான் என்று அவர் குற்றம் சாட்டினார்.

தேனி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

 

Exit mobile version