சிறுபான்மையின மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தும் திமுக: சிஏஏ குறித்து முதல்வர் பேச்சு

சிஏஏ குறித்து சிறுபான்மையின மக்கள் இடையே அச்ச உணர்வை ஏற்படுத்த திமுகவினர் தவறான செய்தியை பரப்புவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 7 பேர் விடுதலை செய்வது தொடர்பாக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஊடகங்கள் குறித்து பேசிய கொச்சையான வார்த்தைகளுக்கு எந்த ஊடகமும் கண்டனம் தெரிவிக்காதது வருத்தமளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

Exit mobile version