சைக்கிள் ஸ்டாண்டை ஏலம் எடுப்பது தொடர்பாக திமுகவினர் மோதல்

வேலூர் மாவட்டத்தில் சைக்கிள் ஸ்டாண்டை ஏலம் எடுப்பது தொடர்பாக தி.மு.க பிரமுகர்கள் இருவர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூரை அடுத்த காட்பாடி காந்திநகரைச் சேர்ந்த ரங்கராஜன் என்பவர் தி.மு.கவில் வர்த்தக அணி துணை அமைப்பாளராக பொறுப்பு வகிக்கிறார். இந்நிலையில், இவரது மனைவி சரஸ்வதி என்பவருடன் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திமுக மாநகராட்சி மண்டல முன்னாள் தலைவர் சுனில்குமார் என்பவர் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், கடந்த 14 ஆம் தேதி நடந்த சைக்கிள் ஸ்டாண்ட் ஏலத்தின் போது சுனில் குமார் தங்களிடம் தகராறு செய்ததாகவும், இதை தொடர்ந்து வீட்டிற்கு அடியாட்களுடன் வந்து தாக்கியதுடன் மிரட்டல் விடுத்து சென்றதாகவும் கூறியுள்ளனர். எனவே சுனில்குமார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் மத்தியில் திமுகவின் அத்துமீறல்கள் அதிகரித்து வரும் நிலையில், திமுக நிர்வாகிகளே மோதிக்கொண்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version