திருநீறு பூசிக்கொண்டு வேட்புமனுத்தாக்கல் செய்த திமுக வேட்பாளர்

இந்து மத மரபுகளை விமர்சிக்கும் திமுகவில் போட்டியிடும் வேட்பாளர் திருநீறு பூசிக்கொண்டு வேட்புமனுவைத் தாக்கல் செய்தது, மக்கள் மத்தியில் விமர்சனத்துக்குள்ளானது.

பெரும்பாலும் திமுகவினர் இந்துமத கடவுள்களை விமர்சித்து மக்கள் மத்தியில் அதிருப்தியை பெறுவது வழக்கம். அதற்கு உதாரணமாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், பொதுமேடையில் இந்து மத மரபுகளை அருவெறுக்கத்தக்க வகையில் விமர்சித்து பேசியது சர்ச்சையானது.

இந்நிலையில் ஆண்டிபட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் மகாராஜன் திருநீறு பூசிக்கொண்டு வேட்பு மனுவைத் தாக்கல் தாக்கல் செய்தார். இது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகி வருவதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

Exit mobile version