திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் சோதனை

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மாவட்ட தேர்தல் அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது.10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுக தரப்பினர் ஓட்டிற்கு பணம் அளிப்பதாக தொடர்ச்சியாக வந்த புகார்களை அடுத்து இந்த சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version