திமுக வேட்பாளரின் நண்பர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

குமாரபாளையம் தொகுதி திமுக வேட்பாளர் வெங்கடாசலத்தின் நண்பர் வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 35 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் வெங்கடாசலத்தின் நண்பர் ரத்தினகிரி சங்கர் என்பவர் வீட்டில், நேற்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வருமான வரித் துறையினரின் சோதனை நடைபெற்றது. அதே வேளையில், திமுக வேட்பாளரின் மற்றொரு நண்பரான வெங்கடாசலம் மற்றும் அவரது தந்தை செங்கோட்டையன் ஆகியோரின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. தேர்தலையொட்டி, பணப்பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் 35 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட ரொக்கம், திருச்செங்கோடு கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ள நிலையில், உரிய ஆவணங்களை காட்டி பணத்தை பெற்றுச் செல்லுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version