தட்டிக்கேட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்தாரா திமுக பிரமுகர்?

சென்னை திருவல்லிக்கேணியில் திமுக பிரமுகர் ஒருவர் தனது வீட்டுக்கு மெட்ரோ வாட்டர் இணைப்பை திருட்டுத்தனமாக செலுத்திக்கொண்டதாக புகார் தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட பரபரப்பு ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தான் மிரட்டப்டுவதாக புகார் தெரிவித்து இருக்கும் விஜயகுமார், கடந்த சட்டமன்ற தேர்தலில் வருத்தப்படாத வாக்காளர் சங்கம் சார்பில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டவர் ஆவார். திருவல்லிக்கேணியை சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவர் தனது வீட்டுக்கு திருட்டுத்தனமாக மெட்ரோ வாட்டர் கனக் ஷன் கொடுத்ததாகவும், இது குறித்து ஆதாரத்துடன், குடிநீர் வழங்கல் நிர்வாகத்திற்கு புகார் அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தன்னை தொடர்பு கொண்ட திருவல்லிக்கேணி திமுக பிரமுகர் ஒருவர், கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுவதாகவும் விஜயகுமார் ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

Exit mobile version