இதோ ஆரம்பிச்சாச்சு திமுகவோட அராஜகம், இனி எதெல்லாம் சகிச்சுக்கனுமோ?

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை மீது, திமுக-வினர் தாக்குதல் நடத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனையில் இருந்த செவிலியர்கள், நோயாளிகள் அச்சமடைந்தனர்.

உடுமலைப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு திமுகவினர் சுமார் 10 பேர் சிகிச்சைக்காக சென்றிருந்தனர்.

அவர்களில் சிலர் மதுபோதையில் இருந்த நிலையில், காத்திருக்குமாறு, மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த தி.மு.க.வினர், மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரிடம், தகாத வார்த்தைகளால் பேசி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவமனையில் உள்ள கண்ணாடிகளை உடைத்து, கடும் ரகளையில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்வு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

மருத்துவமனையில் இருந்தவர்கள் இந்த காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பரவ விட்டுள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உடுமலைப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version