ஈரோட்டில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ கார் மீது திமுகவினர் தாக்குதல்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் கார் கண்ணாடியை உடைத்து திமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

டி.என்.பாளையம் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு அதிமுகவை சேர்ந்த விஜயலட்சுமி 6 வாக்குகள் பெற்று ஒன்றிய குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மறைமுக தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை தாங்கி கொள்ள முடியாத திமுகவினர்,  திமுக ஒன்றிய செயலாளர் சிவபாலன் தலைமையில் கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம் பகுதியில் அதிமுக அமைச்சரை பற்றி அவதூறாக சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

இது தொடர்பாக கேள்வி எழுப்பிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கந்தசாமியின் கார் கண்ணாடியை உடைத்து நொறுக்கினர்.  திமுகவினரின் தாக்குதலில் காயமடைந்த கந்தசாமி அளித்த புகாரின் பேரில் பங்களாபுதூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version