ரேஷன் டோக்கனை திமுகவினருக்கு மட்டும் வழங்கி அராஜகம்

கரூர் மாவட்டம் நெரூர் தென்பாகம் ஊராட்சியில் ரேஷன் பொருள்களுக்கான டோக்கன் வழங்குவதில் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட திமுகவினர் அத்துமீறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஒத்தையூர் கிராம ரேஷன் கடையில், இரண்டாம் கட்ட கொரோனா நிவாரண நிதி மற்றும் நிவாரணப் பொருட்களுக்கான டோக்கன் பெற பொதுமக்கள் வரிசையில் நின்ற நிலையில், அங்கு வந்த திமுக பிரதிநிதிகள் டோக்கன்களைப் பெற்று திமுகவினருக்கு மட்டுமே வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கேள்வி எழுப்பிய ராகுல், சதீஷ், நடேசன் ஆகியோரை திமுகவினரின் பொய் புகாரின் பேரிலும், அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது தம்பி ஆகியோரின் அழுத்தத்தாலும் வாங்கல் காவல்நிலைய போலீஸார் கைது செய்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version